.

Tuesday, June 19, 2007

சேதுசமுத்திரத் திட்டம்- சென்னை உயர் நீதிமன்றம் புதிய யோசனை

சென்னை உயர்நீதிமன்றம் ஆதாம் பாலம் என்றும் ராமர் சேது என்றும் அழைக்கப்படும் பாறைத்திட்டுககளை இடிககாமலேயே சேது சமுத்திரத்திட்டத்தை அமல்படுத்தமுடியுமா என்று முடிவு செய்யுமாறு கேட்டுககொண்டுள்ளது.

சேதுசமுத்திரத்திட்டத்திற்காக இந்தியாவிற்கும் இலங்கைககுமிடையே உள்ள கடற்பகுதியை ஆழப்படுத்தும்போது, கடலுககடியில் இருககும் சில பாறைத்திட்டுக்களும் உடைக்கப்படவிருககின்றன. இத்திட்டுககள் ஆதாமின் பாலம் என்று பொதுவாக அறியப்பட்டாலும், பல இந்துககள் இவை ராமர் கடல்கடந்து இலங்கையை அடைவதற்கு உதவிய அனுமனின் வானரசேனை கட்டிய பாலத்தின் மீதம்தான் என நம்புகின்றனர்.

அதன் காரணமாகவே அப்பகுதி இடிககப்படகககூடாது, கப்பல் போவதற்கான வழியை வேறு பகுதியில் உருவாககலாம் என விஸ்வஇந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புககள் கூறுகின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியசுவாமி மற்றும் இந்துமுன்னணித்தலைவர் ராமகோபாலன் ஆகியோர், ராமர் சேது அகற்றுவதற்கு தடைவிதிகககோரியும், அப்பகுதியை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாககல் செய்திருககின்றனர்.

அம்மனு திங்கள் கிழமையன்று விசாரணைககு வந்தபோது தலைமைநீதிபதி
மதம் தொடர்பான நம்பிகககையினை எளிதில் பறககணித்துவிடமுடியாது என்று கூறியிருந்தார். இன்று பிறப்பித்த இடைககால உத்திரவில் தலைமை நீதிபதி ஷாவும் நீதிபதி ஜோதிமணியும், கடல்அகழ்வுப்பணிக்கு இடைகாலத் தடைவிதிககமுடியாது, எனினும் இப்பிரச்சினை குறித்து தனது நிலைப்பாட்டினை மத்திய அரசு நான்கு வாரங்களுககுள் தெரிவிகக முன்வரவேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் தொல்லியில் துறையினரோ வேறு எவருமோ பாறைத்திட்டுகள் குறித்து ஆய்வு நடத்தியிருககின்றனரா, அவற்றை தேசிய சின்னமாக அறிவிககமுடியுமா என்று மத்திய அரசு விளககவேண்டும், தவிரவும் அப்பகுதியைத்தவிர்த்து சேதுககால்வாய்திட்டத்தினை அமல்படுத்தமுடியுமா என்றும் அது கூறவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்திரவிட்டிருககின்றனர்.

ரிட்மனு இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரையில் திட்டுககளை உடைககாமல் இருககவேண்டுமா என்பது குறித்து மத்திய அரசே முடிவுசெய்யலாம் எனவும் நீதிபதிகள் கூறியிருககின்றனர். ஆனால் சேது திட்டம் குறித்த காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டுமானால், தற்போதையை நிலையில் இத் திட்டப் பணிகளை நிறுத்த முடியாது என்று சேது கால்வாய் பணிகளை மேற்கொண்டுவரும் தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவரான ரகுபதி தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் காரணங்கள், கப்பல் போக்குவரத்துக் காரணங்கள், மீனவர் நலன் ஆகிய மூன்று காரணங்களையும் கருத்தில் கொண்டு தற்போதைய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதை மாற்ற சாத்தியமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

- BBC Tamil

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...