.

Sunday, June 10, 2007

கோ.சி. மணிக்கு மீண்டும் கூட்டுறவுத் துறை

புள்ளி விவரம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை அமைச்சர் கோ.சி. மணி கூட்டுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் வகித்து வரும் துறைகளுடன் கூட்டுறவுத் துறையையும் சேர்த்து அவர் கவனிப்பார். ஏற்கெனவே அவர் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார். இடையில் அந்த துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கூட்டுறவுத் துறை கோ.சி. மணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் கூட்டுறவுத் துறையை இதுவரை அமைச்சர் எ.வ. வேலு கவனித்து வந்தார். இனி உணவுத்துறை மட்டும் அவரது பொறுப்பில் இருக்கும்.

தினமணி

1 comment:

Boston Bala said...

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவையில் 4-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி: IdlyVadai - இட்லிவடை: ஜயேந்திரர் - கோ.சி. மணி சந்திப்பு - கலைஞர் அதிர்ச்சி!

TamilnaduTalk.com - (vikatan.com) > பறிபோகுமா பதவி?ஆபத்தில் 5 அமைச்சர்கள்! - கூட்டுறவுத்துறை அமைச்சரான கோ.சி.மணி... வழக்கம் போல இவருக்கு உள்ளாட்சித் துறை கிடைக்கும்னு எல்லோரும் எதிர்பார்த்தாங்க. ஆனா, இந்தமுறை கூட்டுறவுத் துறையை மட்டும் கொடுத்து நாடிபிடிக்கிற வேலையில இறங்கிடுச்சு தலைமை. இருந்தாலும் இதையெல்லாம் அமைச்சர் பெரிய நோகடிப்பாக எடுத்துக்கிடலை. ஆனா திருவாரூர்ல நடந்த வெற்றி விழா கூட்டத்திலேயே மு.க.ஸ்டாலின், ‘திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்கள் ஈட்டிக் கொடுத்த வெற்றியை தஞ்சை மாவட்டம் கொடுக்கவில்லை. இதைச் சொல்வதால் அண்ணன் கோ.சி.மணி கோபித்துக் கொள்ளக் கூடாது’ எனப் பேச, கோ.சி.மணிக்கு ரத்தம் சுண்டி விட்டது.

இதுக்கிடையில மத்திய அமைச்சரான பழனிமாணிக்கத்துக்கு தலைமைகிட்ட கிடைக்கிற வாஞ்சை வேற அவரை நொந்துபோக வைச்சிடுச்சு.

-o❢o-

b r e a k i n g   n e w s...