ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் மிதாபூர் கிராமத்தைச்சேர்ந்தவர் தேவ்ராஜ் 1976ம் ஆண்டு அகமதாபாத்தை சேர்ந்த தன்ராஜ் மதன்லால் என்பவருக்கு 52,934 ரூபாய் ஒரு பைசா கடன் கொடுத்திருந்தார். தன்ராஜ் அந்த கடனை 1978-ம் வருடம் ஆகஸ்டு 14 திருப்பிச் செலுத்தினார். அப்போது ஒரு பைசாவை மட்டும் திருப் பிக்கொடுக்கவில்லை.
தனக்கு தன்ராஜ் ஒரு பைசா கடன் மற்றும் செலுத்த வேண்டிய வட்டி ரூ.14,934ஐ கேட்டு ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற் காக நோட்டீசு அனுப்ப ரூ.11 செலவு செய்தார்.
விசாரணைக்குப் பின் 1988ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதில் தேவ ராஜிடம் ஒரு பைசாவை மட்டும் தன்ராஜ் திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறி இருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 1989ல் தேவராஜின் மகன் பிரசன்ராஜ் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். 18 ஆண்டு விசாரணைக் குப் பின் ஐகோர்ட்டு நீதிபதி கோபால் கிரிசன் வியாஸ் அளித்த தீர்ப்பில் தேவராஜுக்கு தன்ராஜ் ஒரு பைசா மற்றும் வழக்கு நோட்டீசு செலவு ரூ.11ஐ மட்டும் திருப்பி செலுத்தினால் போதும் இரு வரும் கடனுக்கான வட்டி தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இதனால் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றார்.
மாலைமலர்
Trader fights 29 years to recover one paisa - India
Friday, July 27, 2007
1 பைசாவுக்கு 29 ஆண்டு போராடிய வியாபாரி
Labels:
இந்தியா,
தீர்ப்பு,
பொருளாதாரம்,
வித்தியாசமானவை
Posted by
Boston Bala
at
2:40 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment