.

Friday, July 27, 2007

அனைத்து ஊர்களுக்கும் ஆப்டிக் பைபர் வயர் மூலம் கேபிள் டி.வி. இணைப்பு: தமிழக அரசு முடிவு

தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதும் கேபிள் இணைப்பு வழங்குவது எப்படி? டி.வி. ஒளிபரப்பு தெளிவாக இருக்கும் வகையில் எவ்வாறு இணைப்பு கொடுப்பது என்பது குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

தொலைபேசி, இணைய தள வசதிக்காக ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும், ஆப்டிக் பைபர் வயர்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக அரசு கேபிள் டி.வி. இணைப்புகளை வழங்கினால் 17 ஆயிரம் வருவாய் கிராமங்களுக்கு இது பயன்படும்.

டி.வி. தவிர டெலிபோன், இன்டர்நெட் இணைப்புகளையும் இதன் மூலம் வழங்க முடியும். இதனால் தமிழ் நாட்டின் அனைத்து வருவாய் கிராமங்களுக்கும், விரைவில் கேபிள் டி.வி. இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட் வசதிகளை வழங்க முடியும். தற்போது ஒன்றியங்கள் அளவில் பதிக்கப்பட்டுள்ள கேபிள் இணைப்பு சிறிய கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டால், 2 வருடங்களில் தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களுக்கும் தமிழக அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்க முடியும்.

இந்த தகவலை எல்காட் நிறுவன நிர்வாக இயக்கு னர் சி.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ரூ.500 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கேபிள் இணைப்புகளை பராமரித்தல், கட்டணம் வசூல் செய்தல் ஆகிய பணிகளை உள்ளாட்சி துறை மற்றும் சுய உதவிகுழுக்கள் மூலம் நடத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நகர் புறங்களில் 6 மாதங்களுக்குள்ளும், கிராமங்களில் ஒரு வருடங்களுக்குள்ளும் இந்த திட்டத்தை நிறைவேற்றலாம். இதற்காக சென்னையிலும், மதுரையிலும் தனி அலுவலகங்ககள் அமைக்கலாம்.

'டிஜிட்டல்' முறையில் இந்த இணைப்பு வழங்கப்பட்டால் தெளிவான ஒளிபரப்பு கிடைக்கும். பணம் செலுத்தாதவர்களுக்கு இணைப்பை துண்டிக்க முடியும். கட்டண வசூலையும் 'ஆன்லைன்' செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்

ELCOT to bring all households under cable TV network in Tamil Nadu @ NewKerala.Com News Channel

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...