அமெரிக்காவின் ஸ்டான் போர்டில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா தொடர்ந்து முன்னேறி வருகிறார்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் கிளாசிக் பேங்க் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை தாதியானாவை 6-4, 6-1 என்ற செட் கணக்கில் சானியா வென்றார். இதன் மூலம் அவர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதே போல இரட்டையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் சானியா மிர்சா-ஷகார்பீர் ஜோடி அகுல்-ஏஞ்சலினா ஜோடியை வென்றது. இதன் மூலம் சானியா ஜோடி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று நடக்கும் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் பட்டி சிசென்டருடன் மோதுகிறார் சானியா. இந்தப் போட்டியில் சானியா சாம்பியன் பட்டம் பெற்றால் உலக டென்னிஸ் தர வரிசையில் முன்னேற வாய்ப்பு ஏற்படும்.
Friday, July 27, 2007
டென்னிஸ்:சானியா தொடர் வெற்றி !
Labels:
விளையாட்டு
Posted by
Adirai Media
at
4:24 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment