இலங்கையில் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அத் தேர்தலில் கள்ள வாக்குப் போட்டிருந்தார் என P.A. அஜித் குமார எனபவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அவ் வழக்கை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்றம் அஜித் குமார குற்றவாளியெனத் தீர்ப்பளித்தது. அவருக்கு ஒரு வருட கடும் காவல் சிறைத் தண்டனையும்[rigorous imprisonment], ஏழு வருடங்களுக்கு அவரின் சனநாயக உரிமைகளைப் [civic rights] பறிப்பதென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சனநாயக உரிமைகள் [civic rights ] பறிக்கப்பட்ட திரு. அஜித் குமார அவர்கள் இனி ஏழு வருடங்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கவோ அல்லது தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது.
தகவல் [Source] : lankadissent.com



No comments:
Post a Comment