.

Thursday, April 5, 2007

பிரிட்டன் கடற்படை வீரர்களை விடுவித்தது ஈரான்

டெஹரான்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007

கடந்த 13 நாட்களாக சிறை வைத்திருந்த பிரிட்டன் கடற்படை வீரர்கள் மற்றும் பயணிகள் 15 பேரை ஈரான் அரசு நேற்று விடுவித்தது.

கடந்த மாதம் 23ம் தேதி ஈரானிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பிரிட்டன் கப்பலில் வந்த கடற்படை வீரர்கள் ஏழு பேர் மற்றும் பயணிகள் 8 பேர் உட்ப்ட 15 பேரை ஈரான் அரசு சிறை பிடித்தது. இவர்களை விடுவிக்குமாறு பிரிட்டன் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அதற்கு அடிபணிய ஈரான் அரசு மறுத்து விட்டது.

சிறைபிடித்து 13 நாட்கள் கடந்து விட்ட நிலையில், ஈஸ்டர் பண்டிகைக்கு பிரிட்டன் மக்களுக்கு பரிசாக சிறையில் உள்ள பிரிட்டன் பயணிகளையும், வீரர்களையும் விடுவிடுப்பதாக அந்நாட்டு அதிபர் மகமுத் அகமதின்ஜத் தெரிவித்தார்.

"Yahoo - Tamil"

ச:'முஸ்லீம்கள் சிறுபான்மையினர் அல்ல'

அலகாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007

'உத்தரபிரதேசத்தில் முஸ்லீம்கள் சிறுபான்மையினர் அல்ல' என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு படி, உத்தரபிரதேசத்தில் 18.5 சதவீத முஸ்லீம்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஜாதி, மற்றும் மதம் ஆகியவற்றை வைத்தே அரசியல் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், மாநில அரசு மற்றும் 'அஞ்சுமான் மதரசா நூருல் இஸ்லாம் தேரா கலான்' என்ற அமைப்புக்கும் இடையேயான ஒரு வழக்கு, நீதிபதி சம்புநாத் ஸ்ரீவாஸ்தாவா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது:

அவர்களும் மற்ற மதத்தினருக்கு இணையாக நடத்தப்பட வேண்டும். உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை முஸ்லீம்கள் சிறுபான்மையினர் அல்ல. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.


"Yahoo - Tamil"

ச:சிடி விவகாரம் பா.ஜ.வுக்கு நோட்டீஸ் : தேர்தல் ஆணையம் முடிவு

புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007

சர்ச்சையான சிடியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜ.கட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.வினர் சிடி ஒன்றினை வெளியிட்டனர். இந்த பிரச்சார சிடியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு ஆகிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்துத்துவாவை கடுமையாக வலியுறுத்தும் பிரச்சாரமும் அதில் இடம்பெற்றுள்ளது.

இது முஸ்லிம் மக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக அக்கட்சி தலைமையிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி,அக்கட்சியினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

"Yahoo - Tamil"

ச: சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு : கருணாநிதி

சென்னை, வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007

கல்வி நிறுவனங்கள்,அரசு பணிகள் உள்ளிட்ட பிற துறைகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க இந்த அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளும் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.



"Yahoo - Tamil"

நரபலி? குழந்தை கடத்திய பஞ்சாயத்து தலைவர் கைது

பெரம்பலூர் மாவட்டம் எலம்பலூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் குமார் (வயது 45). தி.மு.க.வை சேர்ந்தவர்.

நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் குமார் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் தனியாக சுற்றி வந்து உள்ளார். அப்போது கட்டிட தொழிலாளி திருப்பதி என்பவர் தனது மனைவி சித்ரா மற்றும் குழந்தைகளுடன் காற்றுக்காக வீட்டு வெளிப்பகுதியில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த குமார் திருப்பதியின் வீட்டுக்குள் புகுந்தார். அங்கு தூங்கி கொண்டிந்த திருப்பதியின் 3-வது மகளை யாருக்கும் தெரியாமல் குமார் தூக்கிக்கொண்டு வெளியே வந்து உள்ளார்.

பிறந்து 25 நாட்களே ஆன அந்த குழந்தைக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு இருந்ததால் வலியில் இருந்த குழந்தை குமார் தூக்கி சென்றதும் `வீர்' என்று அழ ஆரம்பித்தது. குழந்தையின் சத்தம் கேட்டதும் தூங்கி கொண்டு இருந்த திருப்பதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விழித்துக் கொண்டனர்.

குழந்தையை குமார் தூக்கி செல்வதை அவர்கள் பார்த்ததும் கூச்சல் போட்ட னர். இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு ஓடி வந்தனர். இதனை கண்டதும் குழந்தையுடன் குமார் அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்.

அனைவரும் அவரை விரட்ட ஆரம்பித்ததும் குழந்தையை கிழே வைத்து விட்டு குமார் ஓட தொடங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த கல் தட்டி குமார் தவறி விழுந்தார். உடனே அங்கு கூடிய பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.

அப்போது குமார் தனது கிரஷருக்கு இரவு நேரத்தில் வந்ததாக கூறினார். குழந்தையை கடத்தியது ஏன் என்று கேட்டபோது அவர் சரியான பதில் கூறாமல் மழுப்பினார்.

இதனால் மக்கள் ஆத்திரம் அடைந்தனர் பஞ்சாயத்து தலைவர் குமாரின் பதிலில் திருப்தி அடையாததால் அவரை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குழந்தை கடத்தல் குறித்து போலீசில் திருப்பதி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமானம் சரியில்லாமல் குமார் தொழிலில் நஷ்டம் அடைந்து உள்ளார். அப்போது ஜோதிடர் ஒருவர் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை நரபலி கொடுத்தால் தொழில் விருத்தி அடையும் என்று குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் குமார் குழந்தையை தேடியபோது திருப்பதியின் 3-வது மகள் கண்ணில் பட்டு உள்ளாள்.

இதனை நோட்டமிட்ட குமார் நேற்று நள்ளிரவில் திருப்பதியின் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்தி உள்ளார். அப்போது குழந்தை போட்ட சத்தத்தால் குமார் வசமாக மாட்டிக் கொண்டார்.

கைது செய்யப்பட்ட குமார் குறித்தும், குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களாப என்று போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தையை கடத்த வந்த குமார் தனது இரண்டு செல்போன்கள் மற்றும் பேனா உள்பட சட்டை பையில் இருந்த பொருட்களை திருப்பதியின் வீட்டில் தவற விட்டு சென்று உள்ளார். அதனை கண்டெடுத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

# மாலைமலர்

தவறான சிகிச்சையால் மாணவன் பலி.

குமரி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிசில் என்ற 3 வயது மாணவன் தவறான சிகிச்சையினால் பரிதாபமாக உயிர் இழந்தான் .

சற்றுமுன்: ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு விற்பனை

தமிழ்ப் புத்தாண்டு முதல் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளத்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

நன்றி : தினமணி

சற்றுமுன்: இந்தோனேசியாவுக்கு இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் எச்சரிக்கை

சுத்திகரிக்கப்படாத ஆயிலுக்கு பதிலாக சித்திகரிக்கப்பட்ட பாமாயிலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்தால் பாமாயில் உள்பட அனைத்து சமையல் எண்ணெய்களின் இறக்குமதியையும் முற்றிலும் நிறுத்த வலியுறுத்துவோம் என் இந்தோனேசியாவுக்கு இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிற்கு அதிகப்படியாக சுத்திகரிக்காத பாமாயிலை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. உள்நாட்டு நிறுவனங்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற நோக்கோடு சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

மேலும்

சற்றுமுன்: அண்ணாமலை பல்கலை பி.இ. மாணவி தற்கொலை சம்பவம் :விரிவுரையாளர் கைது

அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.இ மாணவி சேட்னா (20) தற்கொலை தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆர்.ரகுராமனை அண்ணாமலை நகர் போலீஸார் மகளிர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனர்.

விடுதியில் தங்கிப் படித்த சண்டீகரைச் சேர்ந்த பொறியியல் மாணவி சேட்னா கடந்த 26ந் தேதி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு காரணமான விரிவுரையாளரை கைது செய்யக்கோரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது.

மேலும்

Wednesday, April 4, 2007

ச: இலங்கை 34.5 ஓவர்களில் 160/3 ; தரங்கா அவுட்

ஆன்டிகுவா (ஏஜென்சி), புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007

இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர்-8 சுற்றுப் போட்டியில் இலங்கை அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.

"Yahoo - Tamil"

ச: சார்க் மாநாடு முடிந்தது

புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007

டெல்லியில் நேற்று துவங்கிய சார்க் மாநாடு இன்று முடிந்து.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, பூடான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் பங்கேற்ற இரண்டு நாள் சார்க் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது.

டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த இந்த மாநாட்டில் சார்க் நாடுகளின் பிரதமர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்


"Yahoo - Tamil"

ச: இந்தியாவுக்கு சிமென்ட் ஏற்றுமதி செய்ய பாக்.விருப்பம்

சிமென்ட் இறக்குமதி மீதான வரி ரத்து அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவுக்கு சிமென்ட் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் முன்வந்துள்ளது.

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வந்த பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அசிஸ்,பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது,வர்த்தகம்,எரிசக்தி மற்றும் வங்கி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்த்திக் கொள்வது குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.

இப்பேச்சுவார்த்தையின்போது சிமென்ட் மீதான இறக்குமதி வரியை இந்திய அரசு ரத்து செய்ததை பயன்படுத்தி,இந்தியாவுக்கு சிமென்ட் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் தயாராக இருப்பதாக மன்மோகனிடம் அசிஸ் கூறியதாக,பிரதமரின் ஊடகவியல் ஆலோசகர் சஞ்சயா பாரு தெரிவித்தார்.

"Yahoo - Tamil"

ச: குற்றவாளிகள் பற்றிய வெப்சைட்: காவல்துறை தொடங்கியது

மோசடி மற்றும் குற்றவாளிகள் பற்றிய புதிய வெப்சைட்டை காவல்துறை தொடங்கியுள்ளது.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவுப் போலீசார் புதிய வெப்சைட்டை தொடங்கியுள்ளனர்.

"Yahoo - Tamil"

ச: 241 கோயில் தேர்கள் செப்பனிடப்படும்

சசென்னை, ஏப். 4:

தமிழக கோயில்களில் உள்ள 241 தேர்களை செப்பனிட அரசு முடிவெடுத்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டின் 668 கோயில்களில் 830 தேர்கள் உள்ளது. இவற்றில் 520 தேர்கள் நல்ல நிலையில் உள்ளன. 301 தேர்கள் செப்பனிட வேண்டிய நிலையில் உள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள 241 தேர்களை தற்போது செப்பனிட அரசு முடிவெடுத்திருக்கிறது.

திருக்கச்சூர் தியாகராஜர் கோயிலுக்கு 15 லட்சம் செலவில் புதிய தேர் செய்யப்படும். திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட மலை மேல் உள்ள கோயில்களுக்கு பக்தர்களின் தேவை, நிதி வசதிக்கு ஏற்ப கம்பி வட ஊர்தி (ரோப் கார்) செய்து தரப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள 200 கோயில்களில் வருமானம் அதிகமாக உள்ளது. இந்த வருமானத்தைக் கொண்டு மற்ற 40 ஆயிரம் கோயில்களுக்கு தினசரி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

"மாலைச் சுடர்"

ச: தேசியக்கொடிக்கு அவமதிப்பு

வால்பாறை, ஏப்.4-

தேசியக் கொடியை அவமதித்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வால்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2ம் வகுப்புக்கான பாடநூல்கள் மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. ஆங்கில புத்தகத்தில் தேசியக் கொடியை பற்றிய பாடம் உள்ளது. தேசிய கொடியின் நிறத்தின் விளக்கங்கள் புத்தகத்தில் தவறாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி வால்பாறை நகைக்கடை வீதியை சேர்ந்த விஸ்வநாதன் (35) வால்பாறை போலீ சில் புகார் செய்தார். இரண்டாம் வகுப்பு ஆங் கில பாட நூல் ஆசிரியர் சாரதா ஆனந்த், பாடநூல் வெளியீட்டாளர் ஜெயகிருஷ்ணன், அச்சிட்டு வெளியிட்ட சென்னை வி.வி.ராஜன் அன்ட் கோ மீது தேசிய கொடியை அவமதித்ததாக வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மாலை முரசு

-o❢o-

b r e a k i n g   n e w s...