.

Wednesday, April 4, 2007

ச: தேசியக்கொடிக்கு அவமதிப்பு

வால்பாறை, ஏப்.4-

தேசியக் கொடியை அவமதித்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வால்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2ம் வகுப்புக்கான பாடநூல்கள் மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. ஆங்கில புத்தகத்தில் தேசியக் கொடியை பற்றிய பாடம் உள்ளது. தேசிய கொடியின் நிறத்தின் விளக்கங்கள் புத்தகத்தில் தவறாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி வால்பாறை நகைக்கடை வீதியை சேர்ந்த விஸ்வநாதன் (35) வால்பாறை போலீ சில் புகார் செய்தார். இரண்டாம் வகுப்பு ஆங் கில பாட நூல் ஆசிரியர் சாரதா ஆனந்த், பாடநூல் வெளியீட்டாளர் ஜெயகிருஷ்ணன், அச்சிட்டு வெளியிட்ட சென்னை வி.வி.ராஜன் அன்ட் கோ மீது தேசிய கொடியை அவமதித்ததாக வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மாலை முரசு

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...