கருத்தம்பட்டி, ஏப். 3- கோவையை அடுத்த சோமனூர் கள்ளப்பாளையம் பாளையம் தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் ரவி என்கிற கந்தவேல் (வயது 37). இவர் கள்ளப்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அட்டைப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார். அங்கு மரக்கழிவு, காகித கழிவு மற்றும் பிற கழிவு பொருட்களை வைத்து அதை கூழாக்கி காய வைத்து அட்டை தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த அட்டைகள் துணிகளுக்கு இடையே மடிப்பு கலையாமல் இருக்க பயன்படுத்துவதற்காக திருப்பூர் போன்ற இடங்களுக்கு அனுப்ப்பட்டு வருகின்றன.
அந்த கம்பெனியில் மைசூரை சேர்ந்த தொழிலா ளர்கள் பலர் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கம்பெனியில் உள்ள பெரிய தொட்டியில் மின்சாரம் பாய்ந்தது.
இதில், அட்டைப்பெட்டி கம்பெனி யின் உரிமையாளர் ரவி என்கிற கந்தவேல், தொழிலாளர்கள் சித்தராசு, குருசாமி, முருகேசன் ஆகிய 4 பேர் இறந்தனர்.
Headline News - Maalai Malar
Wednesday, April 4, 2007
கோவை அருகே அட்டைப்பெட்டி கம்பெனியில் 4 பேர் பலி
Posted by
Boston Bala
at
1:02 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment