.

Wednesday, April 4, 2007

ச: 241 கோயில் தேர்கள் செப்பனிடப்படும்

சசென்னை, ஏப். 4:

தமிழக கோயில்களில் உள்ள 241 தேர்களை செப்பனிட அரசு முடிவெடுத்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டின் 668 கோயில்களில் 830 தேர்கள் உள்ளது. இவற்றில் 520 தேர்கள் நல்ல நிலையில் உள்ளன. 301 தேர்கள் செப்பனிட வேண்டிய நிலையில் உள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள 241 தேர்களை தற்போது செப்பனிட அரசு முடிவெடுத்திருக்கிறது.

திருக்கச்சூர் தியாகராஜர் கோயிலுக்கு 15 லட்சம் செலவில் புதிய தேர் செய்யப்படும். திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட மலை மேல் உள்ள கோயில்களுக்கு பக்தர்களின் தேவை, நிதி வசதிக்கு ஏற்ப கம்பி வட ஊர்தி (ரோப் கார்) செய்து தரப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள 200 கோயில்களில் வருமானம் அதிகமாக உள்ளது. இந்த வருமானத்தைக் கொண்டு மற்ற 40 ஆயிரம் கோயில்களுக்கு தினசரி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

"மாலைச் சுடர்"

1 comment:

Anonymous said...

வெகு நாட்களாக நின்று போயிருக்கும் கோயில் திருப்பணிகளும் தொடர வேண்டும்

-o❢o-

b r e a k i n g   n e w s...