ஒரு பெண்ணும் தன்னைக் காதலிக்காததால், வெறுப்படைந்த கல்லூரி மாணவர், அரசு பேருந்து மீது வேகமாக மோட்டார் சைக்களில் சென்று மோதி தற்கொலை செய்து கொண்டார். இதில் அரசுப் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
முழுவிவரம்...
Tuesday, April 10, 2007
ஒரு பெண்ணும் தன்னைக் காதலிக்காததால் சாகசமாக ஒரு தற்கொலை
Posted by
✪சிந்தாநதி
at
3:10 PM
7
comments
ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது
ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது
சேலம் மாவட்டம் ஏற்காடு வசம்பாடியில் உள்ள எஸ்டேட்டில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் 2 மினி லாரி மற்றும் டாடாசுமோ காரில் 35 பேர் கொண்ட கும்பல் வந்து காவலாளி பழனியை சரமாரியாக அடித்து உதைத்து கட்டிப்போட்ட பின்னர் குடோனில் சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைக் கப்பட்டு இருந்த உயர்ரக சந்தன கட்டைகளை2 லாரிகளில் ஏற்றி கடத்தினர்.
தகவல் அறிந்து சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர சேகரன் தலைமையில் இன்ஸ் பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணி, மாவட்ட வன அலுவலர் பாரதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கொள்ளை அடிக்கப்பட்ட சந்தன மரக்கட்டைகளுடன் வந்த 2 மினி லாரிகளையும் மடக்கினர். அதை பின்தொடர்ந்து வந்தடாடாசுமோ காரையும் சுற்றி வளைத்தனர். கொள்ளை கும்பலை சேர்ந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேர் தப்பி சென்றுவிட்டனர்.
Posted by
✪சிந்தாநதி
at
2:41 PM
1 comments
இடஒதுக்கீடு : மாநில கல்வி அமைச்சர்கள் இன்று ஆலோசனை.
உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது குறித்து டெல்லியில் மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேங்கும் கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மாநில கல்வி அமைச்சகர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கால் துவக்கிவைக்கப்படும் இம்மாநாட்டில், உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது.
Posted by
Adirai Media
at
11:54 AM
0
comments
ஸ்ரீலங்காவில் பஸ்-ட்ரக் மோதல், 20 பேர் மரணம்
கொழும்புவிற்கு தெற்கே 80 கி.மீ தொலைவில் பீர் ஏற்றிச்சென்ற டிரக் ஒன்றும் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் தீப்பிடித்து 20 பேர் மரணமடைந்தனர்; 40 பேருக்கு காயமேற்பட்டது.
மேலும்..Reuters AlertNet -
Posted by
மணியன்
at
11:51 AM
2
comments
ச: Girl gets HIV blood at AIIMS, dies
ஒன்பது வயதுச் சிறுமி ஃபைஜான் அனீமியா வியாதிக்காக தில்லியிலுள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் னுமதிக்கப்பட்டாள். அவளுக்கு இரத்த மாற்றுச் சிகிச்சை நடந்தது. அப்போது அவளுக்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தப் பத்து வயதுச் சிறுமிக்கும் எச்.ஐ.வி. தொற்றிக்கொண்டது.
இதனால் ஃபைஜானது தந்தை கோர்ட்டில் நியாயம் கேட்க, தில்லி உயர்நீதிமன்றம் மருத்துவமனையைக் கடுமையாக விமரிசித்ததோடு. ஃபைஜானின் மருத்துவச் செலவு முழுவதையும் அந்த மருத்துவ மனையே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.
இது ஒரு தனித்த சம்பவமல்ல. இன்னொரு சம்பவத்தில் HIVயால் பாதிக்கப்பட்ட இரத்தம் கொடுக்கப்பட்டதால் தில்லியிலுள்ள AIIMS மருத்துவமனையில் 17 வயதான ஜோதி என்ற பெண் மரணமடைந்திருக்கிறாள். அவள் டெங்கு ஜுரத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவளுக்கு 20 யூனிட் இரத்தம் (HIV கிருமிகள் கலந்த) கொடுக்கப்பட்டது. ஜோதி நோய் குணமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு அவள் தனது பரீட்சைகளையும் எழுதி முடித்தாள். ஆனால் மறுபடியும் அவள் நோய் வயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் HIVயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
நிலாச்சாரல்
மேலும்: Two Delhi hospitals under scanner for HIV transmission
Posted by
Boston Bala
at
2:27 AM
0
comments
Monday, April 9, 2007
திண்டிவனம் வெடிவிபத்து - தேடப்பட்டவர் சரண்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செண்டூரில் கடந்த சனியன்று நிகழந்த ஜீப் வெடிவிபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்து முக்கிய குற்றவாளி சேகர் இன்று வேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
அவரை 15 நாள் காவலில் வைக்க வேலூர் மாவட்ட குற்றவியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Posted by
Adirai Media
at
9:19 PM
0
comments
ராஜ்நாத் சிங், அத்வானியை கைது செய்ய போலீசார் மறுப்பு.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரை கைது செய்ய லக்னோ போலீசார் மறுத்து விட்டனர். அக்கட்சியின் பிரச்சார சிடி விவகாரத்தின் எதிரொலியாக இன்று ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய தலைவர்கள் இன்று தானாக முன்வந்து ஹஸ்ராத்காஞ்ச் காவல் நிலையத்தில் கைதாக முற்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் கைது செய்ய மறுத்தனர்.லக்னோவில் தானாக முன்வந்து கைதாக முற்பட்ட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு, நக்வி மற்றும் அருண் ஜெட்லி உள்ளிட்ட தலைவர்களும் சென்றிருந்தனர். இதுகுறித்து, டிஜிபி ஜி.எல்.ஷர்மா செய்தியாளர்களிம் கூறுகையில், இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் இல்லை என்பதால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், தான் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று கூறினார்.
Posted by
Adirai Media
at
7:38 PM
2
comments
'வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு தத்தெடுக்கும்
வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு தத்தெடுத்து தேவையான உதவிகளை செய்யும்' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்
Posted by
Adirai Media
at
7:13 PM
0
comments
மும்பை பெண் இந்திய அழகியாக தேர்வு
ஞாயிறு அன்று நடந்த பன்டலூன்ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் மும்பையைச் சேர்ந்த சாரா ஜேன் முதலிடத்தில் வந்தார். இவர் இந்தியாவிலிருந்து Miss World உலக அழகிப் போட்டிக்கு ்போட்டிக்கு அனுப்பப் படுவார். இரண்டாவதாக தில்லியைச் சேர்ந்த பூஜா குப்தா தேர்வானார். இவர் Miss Universe உலக அழகிப் போட்டிக்கு அனுப்பப் படுவார்.
மூன்றாவது இடம் பெங்களூருவைச் சேர்ந்த பூஜா சிட்கோபகருக்கு கிடைத்தது.
மேலும்..NDTV.com
Posted by
மணியன்
at
1:26 PM
1 comments
தில்லி விமானவளாகத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து, பயணிகள் தப்பினர்
ஏர் இந்தியாவின் பாங்காக்- தில்லி விமானம் தரையிறங்கும்போது அதன் சக்கரப் பகுதி கோளாறை கவனித்த விமானியின் கோரிக்கையால் 'அவசரநிலை' அறிவிக்கப் பட்டு முழுபாதுகாப்புடன் இறக்கப் பட்டது. மெயின் தளத்தில் இறங்கியபிறகு அதனை டாக்ஸி பாதைக்கு கொண்டுசெல்ல முடியவில்லை. இதனால் 183 பயணிகளும் அவர்களின் உடமைகளும் ஓடுதளத்திலேயே இறக்கப் பட்டு பிறகு விமானம் டிராக்டர் உதவியால் தள்ளப் பட்டது. அப்போது அதன் முன்சக்கரம் (Nose wheel) ஒடிந்து ஓடுதளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் இந்த ஓடுதளத்தை மற்ற விமானங்கள் பயன்படுத்தமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மும்பையிலிருந்து பெரிய கிரேன்கள் வந்தபிறகே விமானத்தை அகற்ற முடியும். இன்று மாலை 3 மணிவரை இந்த நெரிசல் நீடிக்கும் எனத் தெரிகிறது.
Plane blocks runway at Delhi airport, causes delays | Reuters.com
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
1:15 PM
0
comments
உலகக் கோப்பை - ஆஸி 7 விக்கெட்டில் வெற்றி
ஆஸ்திரேலிய காப்டன் ரிக்கி பான்ட்டிங்கின் அதிரடி 86 ஓட்டங்கள் இங்கிலாந்து அணியின் 248 ரன் வெற்றி இலக்கை ஒன்றுமில்லாததாகச் செய்துவிட்டது.
விவரங்களுக்கு..Moneycontrol India :: News ::
Posted by
மணியன்
at
11:55 AM
0
comments
அரசியின் ஆலய தரிசனம்
இந்தியாவில் பிரபலமான விஷ்ணு ஆலயங்களில் ஒன்று பூரி ஜனன்நாதர் ஆலயம். ஒரிசா மாநிலத்தில் இது அமைந்துள்ளது. இன்று அந்த ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரு முக்கிய நிகழ்வுக்காகக் கூடினார்கள்.
அதாவது, பூரியின் மகாராணியார் தனது வாழ் நாளில் அந்த ஆலயத்துக்கு பிரத்தியேகமாக ஒரு தடவைதான் விஜயம் செய்ய முடியுமாம். அந்த தினம் இன்று; அதற்காகத்தான் பக்தர்கள் எல்லாம் இன்று அங்கு கூடியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்துக்கு பல லட்சக் கணக்கான இந்துக்கள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். ஆனால் பூரி ராஜகுடும்ப வழமைப் படி மகாராணியார், தனது வாழ் நாளில் ஒரு தடவை மாத்திரந்தான் அந்த ஆலயத்துக்குச் செல்ல முடியும்.
இந்த ஜகன்நாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 200 மீற்றர்கள் தூரத்தில் உள்ள தனது மாளிகையில்தான், பூரியின் மகாராணியான லீலாவதி பட்டமஹாதேவி கடந்த மூன்று தசாப்தமாக வாழ்ந்து வருகிறார்.
ஆனால் இன்றுவரை அவர் அந்த ஆலயத்தில் காலடி வைத்தது கிடையாது.
மகாராணியும், பூரியின் மஹாராஜாவான கஜபதி திவ்யசிங் தேவ் அவர்களும், இன்று, 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஆலயத்துக்கு விஜயம் செய்யும் போது, அவர்களுடன் இந்தியாவெங்கிலும் இருந்து வந்த இரண்டு டஜன் அரச குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்து கொள்வார்கள்.
கோயிலுக்குள் சென்றவுடன் மஹாராஜா ராணிக்கு ஒரு பட்டுச் சேலையைச் தலையைச் சுற்றிவிட, அதன் பின்னர் அங்கு ஒரு சிறுவயதான அர்ச்சகர் மற்றும் ஒரு திருமணமான பிராமண குலப் பெண் ஆகியோரின் உதவியுடன் மஹாராணியார் அங்கு விளக்கை ஏற்றி வழிபாடு செய்வார் என்று கோயில் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பர்தா அணிந்த மஹாராணியின் இந்த விஜயத்தின் போது பொதுமக்கள் பார்வையில் அவர் படக் கூடாது என்பதற்காக, அவர் அங்கு விஜயம் செய்த 3 மணி நேரத்துக்கு, அந்த ஆலயம் பொதுமக்களுக்கு மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினார்கள்.
ஏனைய அர்ச்சகர்களுக்கும் அப்போது அங்கு அனுமதி கிடையாது.
கடைசி மஹாராணி ஜகன்னாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்தது 1966 ஆம் ஆண்டாம்.
BBC-Tamil
Posted by
Boston Bala
at
3:26 AM
2
comments
Sunday, April 8, 2007
ஜெயலலிதாவின் புத்தாண்டு விருப்பம் !
சென்னை:" இந்தியாவில் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்றால் சட்டம்ஒழுங்கை காக்க தவறிய தி.மு.க., அரசை கலைத்து விட்டு உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும்' என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: திண்டிவனம் அருகே செண்டூர் கிராமத்தில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டதற்கு அத்தாட்சி. இதன் பிறகும் டி.ஜி.பி.,யை விட்டு பேட்டி கொடுக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. பொதுவாக போலீஸ் துறைக்கு பொறுப்பேற்று இருக்கும் முதல்வரே இது குறித்து பதில் அளிக்க வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நான் தான் பதில் சொல்வேன். பல பிரச்னைகளுக்கு தலைமை செயலரை விட்டு அறிக்கை கொடுக்க வைக்கிறார். பதில் சொல்ல முடியாத அளவிற்கு தலைகுனிவு சம்பவங்கள் நடக்கின்றன.திண்டிவனம் அருகே குண்டு வெடித்த சம்பவத்தை "பயங்கரவாத சம்பவம் இல்லை. ஏதோ கல் உடைப்பதற்கு வெடி பொருட்கள் எடுத்துச் சென்றதாக' டி.ஜி.பி., சொல்கிறார். இவர் சொல்வதை யாரும் நம்பத் தயாராக இல்லை. வெடித்தவை சாதாரண கல் உடைக்கிற வெடி பொருட்களாக இருக்க முடியாது.
இது ஆர்.டி.எக்ஸ்., தான். போலீஸ் துறை சீரழிந்து போய்விட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலை ரோந்து பணி என்ற திட்டத்தை ஏற்படுத்தியிருந்தேன். ரோந்து பணிகளை மேற்கொள்வதற்காக 160 வாகனங்களை வழங்கியிருந்தேன். அந்த வாகனங்கள் எங்கே போனது? ரோந்து பணி ஒழுங்காக நடந்திருந்தால் அப்பாவி மக்களின் உயிர் பலியானதை தவிர்த்திருக்கலாம்.
கருணாநிதி பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கிறார். புகலிடம் மட்டுமல்ல சுதந்திரமாக அவர்களது நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குகிறார். இந்தியாவில் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்றால் சட்டம்ஒழுங்கை காக்கவும், நிலைநாட்டவும் தவறிய தி.மு.க., மைனாரிட்டி அரசை உடனடியாக கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
செய்தி : தினமலர் (03.தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஜெயலலிதா கோரிக்கை)
தலைப்பு : கோவி.கண்ணன்
Posted by
கோவி.கண்ணன் [GK]
at
8:13 PM
7
comments
பங்களாதேசம் 67 ஓட்டங்களில் தென்னாப்பிரிக்காவை வென்றது
சூப்பர் எட்டு ஆட்டங்களில் பெரும் அதிர்ச்சியாக பங்களாதேசம் தென்னாப்பிரிக்காவை 67 ஓட்டங்களில் வென்று சாதனை படைத்தது. 83 ஓட்டங்கள் எடுத்த மொஹம்மெத் அஷ்ராஃபுலின் மகத்தான ஆட்டம் இந்த வெற்றிக்கு வழிகோலியது. இதனால் நான்காம் அரையிறுதிப் போட்டி இடத்திற்கு முன்னேற இங்கிலாந்து, மேற்கிந்திய தீவு அணிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்றைய ஆசி- இங்கிலாந்து ஆட்டம் முக்கியம் பெறுகிறது.
Bangladesh stun South Africa by 67 runs
Posted by
மணியன்
at
5:48 PM
0
comments
மலேசியா கார்பந்தயத்தில் மெக்லாரென் முதன்மை
இன்றைய மலேசிய F1 பந்தயத்தில் பெர்ராரியின் இத்தாலிய மாசாவும் கிமி ரைகொனெனும் என்ன முயன்றும் மெக்லாரெனின் ஆதிக்கத்தை தகர்க்க முடியவில்லை. இருமுறை உலகசாம்பியன் பட்டத்தை வென்ற அலொன்சோவும் பிரிட்டனின் புதிய நட்சத்திரமான லெவிஸ் ஹாமில்டனும் தங்கள் மெக்லொரெனில் கடுமையான கோடை வெப்பத்தையும் மீறி முதலிரண்டு இடங்களை வென்றனர்.
FOX Sports - F1 - McLaren duo take glory in Sepang
: : : CARtoday.com/Motorsport : : :
Posted by
மணியன்
at
5:38 PM
0
comments
b r e a k i n g n e w s...


