.

Thursday, March 1, 2007

பஸ் படிக்கட்டில் பயணம், மாணவர் சாவு

சென்னையில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர், தவறி கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் தினேஸ் (20 வயது), அரூம்பாக்கதில்லுள்ள கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ படித்து வந்தார். புதன்கிழமை தினேஷ் திருவேற்காடு நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து எண்.159-ல் படியில் நின்றபடி பயணம் செய்தார். கோயம்பேடு அருகில் பஸ் சென்றபோது தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்ஸின் பின் சக்கரம் தினேஸ் மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.கோயம்பேடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நன்றி :- தினமணி.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...