.

Monday, February 26, 2007

இ-பைசைக்கிள் - பெங்களூரில் அறிமுகம்

பெங்களூரில் பேட்டரியில் இயங்கும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் "இ-பைசைக்கிள்" என்ற இருசக்கர அறிமுகமுகப்படுத்தியுள்ளது

வாகனத்தை சேவியோ என்ற நிறுவனம் இமாசல பிரதேசத்தில் தயாராகின்றது. சீனாவில் இருந்து பேட்டரிஇறக்குமதியாகிறது.

அரை யூனிட் மின்சாரம் இருந்தால் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 55 கி.மீ. ஓட்டலாம். சார்ஜ் தீர்ந்தால் பெடல் செய்தும் ஓட்டலாம். பேட்டரியை தனியே பிரித்தெடுத்து சார்ஜ் செய்த பிறகு சைக்கிளில் பொருத்திக் கொள்ளலாம்.

இதில் 120 கிலோ பளு எடுத்து செல்லலாம். டபுள்ஸ் செல்லலாம். பிரேக் பிடித்ததும் பேட்டரி தானாக ஆஃப் ஆகிவிடும். சிக்னலிலோ, மற்ற இடங்களிலோ நிற்கும் நேரத்தில் மின்சாரம் செலவாகாது. மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள இ-பைசைக்கிளை பெங்களூரில் சுசில் வித்யுத் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


இது மாலை முரசில் வந்த செய்தி. வேறு சுட்டி கிடைத்தால் Update செய்யப்படும்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...