.

Saturday, March 31, 2007

சற்றுமுன்: முழு அடைப்புக்கு விஜயகாந்த் ஆதரவு

உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பாக, தமிழகத்தில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு, தே.மு.தி.க. ஆதரவு தெரிவிக்கும் என்று, அதன் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்பதை அனைவரும் அறிவோம். மத்திய அரசு இட ஒதுக்கீடு சம்பந்தமாக சரியான விவரத்தை, உச்ச நீதிமன்றத்துக்கு தராததால்தான், இத்தகைய விளைவு.

அனைத்துக் கட்சி கூட்டத்தை, தி.மு.க. கூட்டி முழு அடைப்பு சம்பந்தமாக பேசியிருக்கலாம். இருந்தாலும், சமுதாயத்தின் அடித்தள மக்களின் நலன் கருதி, இந்த முழு அடைப்புக்கு தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

- தினகரன்

1 comment:

டண்டணக்கா said...

Wow, surprise. At last, Mr.Viji is taking a stance on this issue, appreciable.

-o❢o-

b r e a k i n g   n e w s...