.

Tuesday, April 3, 2007

ச: டில்லியில் சார்க் அமைப்பின் 14வது உச்சி மாநாடு - மன்மோகன்சிங் உரை

சார்க் அமைப்பின் 14வது உச்சி மாநாட்டை டில்லியில் இன்று தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர், பூடான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சார்க்< அமைப்பின் 14வது உச்சி மாநாடு டில்லியில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில், ஆப்கானிஸ்தான் சமீபத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டது. இம்மாநாட்டில் பங்கேற்க எட்டு நாடுகளின் தலைவர்களும், வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்தியா வந்துள்ளனர். மேலும் சீனா, ஜப்பான்,தென்கொரியா, மாலத்தீவு, ஈரான் உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன்சிங் , சார்க் நாடுகளிடையே பரஸ்பர நல்லுறவு மேம்பட வேண்டும் எனவும், இந்தியா வரும் சார்க் நாடுகளின் பொருட்களுக்கு தடை இல்லா வர்த்தகத்தை ஏற்படுத்தும் பொருட்டு இந்த ஆண்டின் இறுதிக்குள் சுங்க வரி ரத்து செய்யப்படும் எனவும், சார்க் நாடுகளுக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், நோயாளிகளுக்கு விசா விதிகள் தளர்த்தப்படும் எனவும், சார்க் நாடுகளின் தலைநகரங்களை இணைக்க விமான போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என உரையாற்றினார்.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...