.

Tuesday, April 3, 2007

ச: அயர்லாந்து பயிற்சியாளர் ஆவேசம்

அயர்லாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய மரியாதையை பத்திரிகைகள் அளிக்காமல் இருப்பதாக அதன் பயிற்சியாளர் ஆட்ரியன் பிரல் கூறியுள்ளார்.

அயர்லாந்து அணி இன்று தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அயர்லாந்து பயிற்சியாளர் ஆட்ரியன் பிரல் கூறியதாவது: அயர்லாந்து கிரிக்கெட் வீரர்கள் ஏதோ கேளிக்கை நிகழ்ச்சிக்கு வந்திருப்பது போல பத்திரிகைகள் கருதுகின்றன.

சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பத்திரிகைகள் உரிய மதிப்பு அளிக்கவில்லை. மற்ற அணியின் கிரிக்கெட் வீரர்கள் எங்களை அங்கீகரித்து வாழ்த்து தெரிவிக்கின்றன. ஆனால் பத்திரிகைகள் மட்டும் உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை.



"மேலும் செய்திக்கு மாலைச் சுடர்"

1 comment:

Boston Bala said...

I presume this is a famous coaching & media representation strategy. New England Patriots keep playing the 'Repsect' card to motivate its team ;)

-o❢o-

b r e a k i n g   n e w s...