.

Tuesday, April 3, 2007

ச: ஆஸ்திரேலிய கடற்கரைத் தீவுகளில் திடீர் சுனாமி

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாலமன் தீவுகளில் திங்கள் காலை உள்ளூர் நேரம் காலை 7:30 மணிக்கு, திடீரென தாக்கிய பசிபிக் பெருங்கடல் ஆழிப்பேரலையால், கிட்டத்தட்ட பதின்மூன்று பேர் மரணமடைந்தனர். முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் அலையில் அடித்துச் செல்லப்பட்டதால், இறந்தவர் எண்ணிக்கை இன்னும் கூடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து நிமிடங்களுக்குள் பதினாறடி உயரத்திற்கு எழுந்த நீர்ச்சுவரானது, சிட்னி நகரின் பாண்டி (Bondy beach) கடற்கரை முழுவதும் நிறைந்துவிட்டது. ஹவாய் நகரத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தில் சாலமன் தீவுகளுக்கான சுனாமி அபாயம் பதிவாகி இருந்தது. ஆழிப் பேரலைத் தாக்குதலுக்குப் பின்னர் தொடர்ச்சியாக ஆறு ரிக்டர் அளவிலான நில நடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...