.

Thursday, May 24, 2007

பண்ணை கூரை இடிந்து 10,000 கோழிகள் சாவு.

திருச்சி அருகே கோழிப்பண்ணையின் கூரை இடிந்து விழுந்ததில் 10 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக இறந்தன. திருச்சியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு, துறையூர் அருகே உள்ள கலிமுடையபட்டியில் உள்ள முனியப்பன் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் பண்ணையில் இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பரிதாபமாக இறந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம் என கூறப்படுகிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...