லெபனானிய இராணுவத்துக்கும் அங்குள்ள ஒரு பாலத்தீன அகதி முகாமில் நிலைகொண்டுள்ள இஸ்லாமிய ஆயுதபாணிகளுக்கும் இடையிலான மோதல் இழுபறி நிலை தொடருகின்ற அதேவேளையில், லெபனானியப் பிரதமர், பௌட் சினியோரா அவர்கள், தனது அரசு ஆயுத பயங்கரவாதத்தை ஒழிக்கும் என்று கூறியுள்ளார்.
பத்தா அல் இஸ்லாம் குழுவைச் சேர்ந்த, தீவிரவாதிகள், இஸ்லாம் மற்றும் பாலத்தின விடயம் ஆகியவற்றின் முகமூடிக்குள் பதுங்கியிருக்கின்ற ஒரு குற்றக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு லெபனானின் நஃர் அல் பாரட் முகாமில் உள்ள தீவிரவாதிகளை, லெபனான் துருப்புகள் சுற்றிவளைத்துள்ளன.
நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிகாரபூர்வமற்ற மோதல் நிறுத்தத்தின் போது, அங்கிருந்து வெளியேற முடியாது போன ஆயிரக்கணக்கான அகதிகளின் பாதுகாப்புக் குறித்து தாம் அச்சம் அடைந்துள்ளதாக மனித நேய அமைப்புகள் கூறுகின்றன.
- BBC Tamil
BBC NEWS | Middle East | Analysis: Lebanon's new flashpoint: "This week's heavy fighting between the Lebanese army and a shadowy radical Islamist group is adding a new flashpoint to a region in crisis."
Thursday, May 24, 2007
லெபனானிலுள்ள் பாலத்தீன அகதி முகாமில் தொடர்ந்து மோதல்
Labels:
உலகம்
Posted by
Boston Bala
at
11:27 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment