.

Thursday, May 24, 2007

ச: இட ஆக்கிரமிப்பு விவகாரம்: கொச்சியில் கடையடைப்பு

கேரளாவில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து கட்டிய விடுமுறை விடுதிகளை மூணாறில் தகர்க்க ஆரம்பித்த கேரள முதல்வரின் முயற்சி மற்ற மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. கொச்சி நகரின் முக்கிய சாலையான மகாத்மா காந்தி சாலையில் ஒரு சென் ட் நிலம் 25-30 இலட்சம் பெறுமானமுள்ளது. மாவட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் பலகோடி பெறுமான ஆக்கிரமிப்புக்கள் கண்டறியப் பட்டு அவை அழிக்கப் பட்டன. அதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளும் கடை உரிமையாளர்களும் தங்களுக்கு தக்க முன்னறிவிப்பு கொடுக்கபடவில்லை என்று எழுப்பிய எதிர்ப்பை யடுத்து அவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. இருப்பினும தங்கள் ஒற்றுமையை காட்டும் விதமாக கேரள சாம்பர் ஆப் காமர்ஸ் தரப்பில் இந்த கடையடைப்பு நடத்தப் படுகிறது. உணவகங்களும் அவர்களுக்கு ஆதரவாக இன்று மூடப்பட்டுள்ளன.

The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...