.

Thursday, May 24, 2007

குலதீபமங்கலம் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் உள்ளே சென்று வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும்

விழுப்புரம் அருகே குலதீபமங்கலத்தில் உள்ள கோயிலுக்குள் சென்று தாழ்த்தப்பட்டோர் வழிபட அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்க மாநில இணைப் பொதுச் செயலர் சிந்தனைச் செல்வன் தெரிவித்தார்.

திருக்கோவிலூர் அருகே குலதீபமங்கலத்தில் நடைபெற்ற திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு தொடர்பாக 500 க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு, இந்த கோயிலுக்கு சீல் வைத்துள்ளனர்.

அரசு அதிகாரிகளால், இக்கோயிலுக்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது. எம்எல்ஏ முன்னிலையில் இந்த கிராம மக்கள் பூட்டை உடைத்திருப்பது அரசியல் சாசனத்தை மீறிய செயல். இது தொடர்பாக முகையூர் பா.ம.க. எம்எல்ஏ கலிவரதன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

தினமணி

1 comment:

Anonymous said...

பார்பனர்முகையூர் பா.ம.க. எம்எல்ஏ கலிவரதன் ஐ வன்மையாக கண்டிக்கிறோம்.:-)))))

-o❢o-

b r e a k i n g   n e w s...