.

Wednesday, May 23, 2007

கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் கைது

கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் தில்லியில் அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக போதைத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் 1.5 கிராம் போதைப் பொருளை அவருடைய வீட்டிலிருந்து பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம்.

இந்த சம்பவத்தின்போது மணீந்தர் சிங் வீட்டில் போதைப் பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் சயம் சித்திக் என்பவரையும் கைது செய்தனர். போதை பொருள் விற்பனையில் தொடர்புடைய நைஜீரிய பிரஜையை காவல்துறையினர் பின்தொடர்ந்தபோது அவர் ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்தபோதுதான் அது மணீந்தர் சிங்கின் வீடு என அவர்களுக்குத் தெரிந்தது.

இடதுகை சுழற் பந்துவீச்சாளரான மணீந்தர், 35 டெஸ்ட் போட்டிகளிலும், 59 ஒருதினப் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்துவருகிறார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...