.

Wednesday, May 23, 2007

பரிசல்களில் ஓட்டை போட்ட போலீஸ்: பரிசலோட்டிகள் சாலை மறியல்

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள பரிசல் துறை, அதனை ஒட்டியப் பகுதிகளில் பரிசலோட்டிகள் தங்கள் பரிசல்களை கவிழ்த்து வைப்பது வழக்கம். இந்நிலையில் பயணிகளுக்கு இடையூறாக வழித்தடத்தில் பரிசல்களை கவிழ்க்கக் கூடாது என பென்னாகரம் டிஎஸ்பி ஜெ.லட்சுமணசுவாமி திங்கள்கிழமை மாலை நேரில் வந்து எச்சரித்துள்ளார்.

எச்சரிக்கையை மீறி அப் பகுதியில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட பரிசல்களில் துளையிட்டு போலீசார் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பரிசலோட்டிகளின் ஜீவாதாரமான பரிசல்களை சேதப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த பரிசல் ஓட்டிகள், செவ்வாய்க்கிழமை காலை ஒகேனக்கல் காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சேதப்படுத்திய பரிசல்களை சாலையில் போட்டு வைத்தனர்.

காலை 6 முதல் பகல் 11 மணி வரை மறியல் போராட்டம் நடைபெற்றதால் ஒகேனக்கல் பகுதிக்குள் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. பரிசலில் செல்வதற்காக ஆர்வமுடன் பரிசல் துறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...