.

Wednesday, May 23, 2007

அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் குற்றஞ்சாட்டு.

அ.தி.மு.க. அரசில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் நத்தம் விசுவதநாதன். இவர் தற்போது நத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறது. இவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடு அடிக்கடி தி.மு.க.அரசின் தூண்டுதலால் சோதனையிடப்படுகிறது. கடந்த பல மாதங்களுக்கு இவரது வீட்டை வருமானவரித்துறையினர் திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது எதுவும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் நேற்றும் விசுவநாதன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் திடீரென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். டி.எஸ்.பி. ரத்தின குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன்,ராஜாமுகமது உள்பட 7 பேர் கொண்ட குழு நேற்று காலையில் நத்தம் விசுவநாதன் வீட்டுக்கு சென்றது.அவர்கள் வீட்டின் கதவை ஞீட்டிவிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். நத்தம் விசுவநாதனின் ஞீர்வீக வீடு,வேம்பார்பட்டியை அடுத்த உலுப்பக்குடியில் உள்ளது. அங்கும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். இதுபோல நத்தம் பகுதியில் உள்ள வீடு,மாம்பழச்சாறு கம்பெனி,திண்டுக்கல்லில் நிறுவன அலுவலகம் உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.இதுபற்றி முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:_என்வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள் அடிக்கடி சோதனையிடப்படுகிறது. தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. என்னையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் மிரட்டுவதற்காகவே தி.மு.க. அரசு இந்த பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். எங்களை ஒருபோதும் மிரட்ட முடியாது.நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. வீட்டில் இருந்த எலக்டிரிக் பில் மற்றும் ஒரு சில பில்களை மட்டும் எடுத்துச்சென்றார்கள். இதற்கு அவர்கள் எழுதிக்கொடுத்தும் சென்றுள்ளனர்.இவ்வாறு முன்னாள் அமைச்சர் விசுவநாதன் கூறினார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...