.

Tuesday, May 22, 2007

ச:மாதாவுக்கு வைர கிரீடம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம் பொருத்தப்பட்டது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாவுக்கு பாரம்பரிய வைர கற்களால் கலை நயமிக்க வைர கிரீடம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிரீடம் தயாரிக்கும் பணி 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இடைவிடாது ஏழு நபர்கள் கொண்ட குழுவால் இந்த மாதம் முடிக்கப்பட்டுள்ளது. கிரீடத்தில் பொருத்தப்பட்டுள்ள வைரக் கற்கள் அனைத்தும் விலை மதிப்பற்றவை. கிரீடம் பொருத்தப்பட்ட பின், தேவாலயத்தில் தினசரி சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருவதாகவும், பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளதாகவும் பேராலய அதிபர் சேவியர் அடிகள் தெரிவித்தார்.

தினமலர்

4 comments:

-L-L-D-a-s-u said...

//கிரீடம் பொருத்தப்பட்ட பின், தேவாலயத்தில் தினசரி சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருவதாகவும், பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளதாகவும் பேராலய அதிபர் சேவியர் அடிகள் தெரிவித்தார்.
//

;)

ஜோ/Joe said...

இது தேவையில்லாத வேலை .இந்த பணத்தைக் கொண்டு வேறு பயனுள்ள அற திட்டங்களையோ அல்லது வரும் பயணிகளுக்கு வசதிகளையோ செய்து கொடுத்திருக்கலாம்.

TBR. JOSPEH said...

இது ஒரு விக்கிரக ஆராதனைக்கு இட்டுச் செல்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் இது பக்தர்களின் தனிப்பட்ட நேர்ச்சை என்றால் அதை குறை கூற நாம் யார்?

TBR. JOSPEH said...

இந்த பணத்தைக் கொண்டு வேறு பயனுள்ள அற திட்டங்களையோ அல்லது வரும் பயணிகளுக்கு வசதிகளையோ செய்து கொடுத்திருக்கலாம். //

வேளாங்கண்ணியில் இதற்கு எந்த குறைவும் இல்லை என்று நினைக்கிறேன். இதற்கு மேலும் வசதிகள் செய்துகொடுக்க அந்த கிராமத்தில் வழியில்லை..

ஆனால் ஒரு கல்லூரியை துவக்கியிருக்கலாம். சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு சாதி, மத பேதம் பாராமல் இலவசமாக படிக்க வழி செய்திருக்கலாம்...

-o❢o-

b r e a k i n g   n e w s...