.

Wednesday, June 20, 2007

குடியரசுத் தலைவர் பதவிக்கு 4 பேர் மனு தாக்கல்

குடியரசுத் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் 4 பேர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்த நான்கு பேரில் நரேந்திர நாத் துபே (வாராணாசி), ராம் குமார் சுக்லா (லக்னௌ), விஜய் நாராயண் (கான்பூர்) ஆகியோர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

நான்காவது நபரான ஹரி பிரசாத் (தில்லி) வாக்காளர் என்பதற்கான முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடந்த 16-ம் தேதி தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 30-ம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனுக்களைத் திரும்ப பெற்றுக் கொள்ள ஜூலை 4-ம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 19-ம் தேதி தேர்தலும், 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடை பெறுகிறது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...