.

Wednesday, June 20, 2007

பட்டுக்கோட்டையில் சிக்குன் குனியா நோய் விழிப்புணர்வு பேரணி.

பட்டுக்கோட்டை நகரில் சிக்குன் குனியா நோய் பரவாமல் தடுக்க பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தொண்டு நிறுவனங்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நகராட்சி காந்தி பூங்காவில் இருந்து புறப்பட்டது.நகரசபை தலைவர் பிரியா இளங்கோ தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. ரெங்கராஜன் பேரணியை தொடங்கி வைத்தார். நகரசபை ஆணையர் ராமசாமி, துணை தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சக்திவேல், மாவட்ட என்.எஸ்.எஸ். அலுவலர் ராம் மனோகர், திட்ட அலுவலர் மாரிமுத்து, பழனிவேல், கண்டியன்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தா, நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி முக்கிய வீதிகள் வழியாக சிக்குன் குனியா நோய் பற்றியும் அதை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது பற்றியும் துண்டு பிரசுரங்களை வினியோகித்து பிரசாரம் செய்வது முடிவில் நகராட்சி அலுவலகம் வந்தடைந்தது.இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் செய்து இருந்தனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...