கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனின் நாளை தொடங்குகிறது.
ரோஜர்பெடரர் (சுவிட்சர் லாந்து), ரஃபேல்நடால் (ஸ்பெயின்), ரோட்டிக் (அமெரிக்கா), ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்), மரியா ஷரபோவா(ரஷியா), ஜெலீனா ஜான்கோவிக் (கென்யா) உள்பட முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
விம்பிள்டன் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சானியாமிர்சா மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆடுகிறார். சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓப்பனில் இருவரும் இணைந்து ஆட வேண்டியது ஆனால் மகேஷ்பூபதி தரப் பட்டியலில் மிகவும் பின் தங்கி இருந்ததால் ஆட முடிய வில்லை.
தற்போது தரவரிசையில் முன்னேற்றம் அடைந்ததால் சானியாவுடன் இணைந்து ஆடுகிறார்.
சானியாமிர்சா ஒற்றையர் ஆட்டத்தில் முதல் சுற்றில் ரஷ்யவீராங்கனை ஷெவ்கோவாவை எதிர்கொள்கிறார். இரட்டையர் ஆட்டத்தில் அவர் இஸ்ரேல் வீராங்கனை சகாருடன் இணைந்து விளையாடுவார்.
Sunday, June 24, 2007
விம்பிள்டன்: கலப்பு இரட்டையரில் சானியா - மகேஷ் இணை.
Labels:
உலகம்,
விளையாட்டு
Posted by
வாசகன்
at
1:34 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...



No comments:
Post a Comment