.

Tuesday, June 5, 2007

எம்.பி. பதவி மறுப்பு: கிருஷ்ணசாமி திடீர் ராஜினாமா மிரட்டல்.

தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 15-ந் தேதி தேர்தல் நடக்கிறது.6 எம்.பி.க்களில் 2 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும், 1 இடத்தில் காங்கிரசும், மற்றொரு இடத்துக்கு இந்திய கம்ïனிஸ்டு கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.காங்கிரஸ் வேட்பாளராக பி.எஸ்.ஞானதேசிகனை நேற்று கட்சி மேலிடம் அறிவித்தது. ஏற்கனவே தற்போது எம்.பி. ஆக உள்ள அவருக்கு அதேபதவியில் நீட்டிப்பு கொடுத்து வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தமிழக காங்கிரஸ் தலை வர் கிருஷ்ணசாமிக்கு அதிர்ச் சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.மேல்-சபை எம்.பி. பதவியை எப்படியும் பெற்று விடவேண்டும் என்பதில் கிருஷ்ணசாமி மிகவும் தீவிரமாக இருந்தார். தமிழககாங்கிரஸ் தலைவர் என்ற அடிப்படையில் மட்டு மின்றி வன்னிய சமுதா யத்தை சேர்ந்தவருக்கு பிரதி நிதித்துவம் பெறும் வகையில் எம்.பி. பதவிக்கு அவர் குறிவைத்தார். டெல்லியில் மூத்த தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேசிய போதும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

மேலும் விபரங்களுக்கு.... மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...