.

Saturday, June 23, 2007

அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு திரும்பியது .

சுனிதா பத்திரமாக தரை இறங்கினார்.
அட்லாண்டிஸ் விண்கலம் வீராங்கனை சுனிதா உள்பட 7 நிபுணர்களுடன் பத்திரமாக தரை இறங் கியது.விண்வெளியில் அமைக்கப் பட்டு வரும் சர்வதேச மிதக் கும் ஆய்வுக்கூடத்துக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனம்கடந்த 8-ந்தேதி அட்லாண்டிஸ் விண்கலத்தை அனுப்பியது. விண்வெளி ஆய்வுக்கூடத்தில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி ஆய்வு நடத்திய இந்திய வீராங்கனை சுனிதாவை அழைத்து வரவும் அங்கு தளவாடங்களை பொருத்தவும் இந்த விண்கலம் அனுப்பபட்டது. சுனிதா மற்றும் 6 விண் வெளிநிபுணர்களுடன் அட்லாண்டிஸ் ராக்கெட் கடந்த 19-ந்தேதி மீண்டும் பூமிக்கு புறப்பட்டது.ஏற்கனவே அட்லாண்டிஸ் விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்ட போது அதன் வெப்ப தடுப்பு தகடு சேதம் அடைந்தது.ஆய்வுக் கூடத்தில் கம்ப்ïட் டர்களும் பழுதடைந்தன. இதனால் சுனிதா பூமிக்கு திரும்புவதில் சிக்கல் எழுந்தது. இந்த கோளாறுகள் சரி செய் யப்பட்டு அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு புறப்பட் டதும் புளோரிடா மாநிலம் கேப்கனவரால் கென்னடி தளத்தில் தரை இறங்க திட்ட மிடப்பட்டு இருந்தது.ஆனால் புளோரிடா மாநிலத்தில் மோசமான வானிலை காணப்பட்டது. பலத்த காற்று வீசியது. இதனால் விண்கலம் தரை இறங்குவது மேலும் தாமதமானது.
இதைதொடர்ந்து கலி போர்னியா மாநிலத்தில் மொஜாவ் பாலைவனப்பகு தியில் உள்ள கென்னடி விமானபடை தளத்தில் விண் கலத்தை தரைஇறக்க முடிவு செய்யப்பட்டது.
விண்கலம் வானவெளி மண்டலத்தில் இருந்து புவி மண்டலத்துக்குள் நுழையும் போது விண்கலத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பரபரப்பு 3நிமிடங்களுக்கு ஏற்பட்டது. விண்கலம் பூமியில் தரை இறங்குவது மேலும் தாமதப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இதில் உள்ள எரிபொருள் ஞாயிற்றுக்கிழமை வரைதான் போதுமானாகதான் இருந் தது.ஆனால் மிகுந்த பர பரப்புக்கு இடையே நேற்று நள்ளிரவு 1.19 மணிக்கு அட்லாண்டிஸ் விண்கலம் கலிபோர்னியாவில் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்தில் பத்திரமாக தரை இறங்கியது.அப்போது `நாசா' நிறு வனத்தில் கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.விண்வெளியில் 195 நாட் களுக்கு மேல் தங்கி இருந்த பெண் என்று சாதனை படைத்த சுனிதா பூமிக்கு எந்த ஆபத்தும் இன்றி திரும்பியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அட்லாண்டிஸ் விண்கலத் தில் இருந்து இறங்கிய சுனிதாவுக்கும் மற்ற 6 வீரர்களும் பல்வேறு மருத் துவசோதனைகள் நடத் தப்பட்டன. விண்வெளியில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி இருந்த சுனிதாவுக்கு இந்த பூமி இப் போது ஒரு புதிய உலகம் போல் தோன்றுகிறது. அவர் சகஜ நிலமைக்கு திரும்ப இன்னும் 45 நாட்கள் ஆகும்.
சுனிதாவுக்குப்பதில் இப்போது மிதக்கும் விண் வெளி ஆய்வுக்கூடத்தில் ஆன்டர்சன் என்ற வீரர்தங்கி இருக்கிறார்.அட்லாண்டிஸ் விண்கலம் தரை இறங்கும் இடம் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்துக்கு மாற்றப்பட்டதால் நாசா நிறுவனத்துக்கு கூடுதலாக 17 லட்சம் டாலர் செலவு பிடித்துள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...