சுனிதா பத்திரமாக தரை இறங்கினார்.

இதைதொடர்ந்து கலி போர்னியா மாநிலத்தில் மொஜாவ் பாலைவனப்பகு தியில் உள்ள கென்னடி விமானபடை தளத்தில் விண் கலத்தை தரைஇறக்க முடிவு செய்யப்பட்டது.
விண்கலம் வானவெளி மண்டலத்தில் இருந்து புவி மண்டலத்துக்குள் நுழையும் போது விண்கலத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பரபரப்பு 3நிமிடங்களுக்கு ஏற்பட்டது. விண்கலம் பூமியில் தரை இறங்குவது மேலும் தாமதப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இதில் உள்ள எரிபொருள் ஞாயிற்றுக்கிழமை வரைதான் போதுமானாகதான் இருந் தது.ஆனால் மிகுந்த பர பரப்புக்கு இடையே நேற்று நள்ளிரவு 1.19 மணிக்கு அட்லாண்டிஸ் விண்கலம் கலிபோர்னியாவில் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்தில் பத்திரமாக தரை இறங்கியது.அப்போது `நாசா' நிறு வனத்தில் கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.விண்வெளியில் 195 நாட் களுக்கு மேல் தங்கி இருந்த பெண் என்று சாதனை படைத்த சுனிதா பூமிக்கு எந்த ஆபத்தும் இன்றி திரும்பியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அட்லாண்டிஸ் விண்கலத் தில் இருந்து இறங்கிய சுனிதாவுக்கும் மற்ற 6 வீரர்களும் பல்வேறு மருத் துவசோதனைகள் நடத் தப்பட்டன. விண்வெளியில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி இருந்த சுனிதாவுக்கு இந்த பூமி இப் போது ஒரு புதிய உலகம் போல் தோன்றுகிறது. அவர் சகஜ நிலமைக்கு திரும்ப இன்னும் 45 நாட்கள் ஆகும்.
சுனிதாவுக்குப்பதில் இப்போது மிதக்கும் விண் வெளி ஆய்வுக்கூடத்தில் ஆன்டர்சன் என்ற வீரர்தங்கி இருக்கிறார்.அட்லாண்டிஸ் விண்கலம் தரை இறங்கும் இடம் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்துக்கு மாற்றப்பட்டதால் நாசா நிறுவனத்துக்கு கூடுதலாக 17 லட்சம் டாலர் செலவு பிடித்துள்ளது.
No comments:
Post a Comment