.

Saturday, June 23, 2007

ச: மாநிலத்தில் மின்வெட்டு இல்லை: தமிழக முதல்வர்

தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகின்றது என்ற அ இ அதிமுகவின் தலைவர் செல்வி ஜெயலலிதாவின் கூற்றை மறுத்து தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று மதுரையில் பேசுகையில் மாநிலத்தில் மின் உற்பத்தி உபரியாக இருப்பதாகவும் அதனை பஞ்சாப் மற்றும் மகாராட்டிரத்திற்கு விற்பதாகவும் தெரிவித்தார். சில பகுதிகளில் ஏற்படும் மின்தடங்கல்களுக்கு மின்மாற்றிகள் போதுமானவை இல்லாததே காரணம் என்றார். கடந்த ஆட்சியில் 14,000 மின்மாற்றிகள் பற்றாக்குறை இருந்தபோது அதிமுக ஆட்சி நடவடிக்கை எடுக்கத் தவறியதே இதற்கு காரணம் என்றார். பேட்டியின் போது மாநில மின்சார அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடனிருந்தார்.
The Hindu News Update Service

1 comment:

Unknown said...

யாரு சொன்னது... தஞ்சை மாவட்டத்தில் வந்து பாரும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...