.

Saturday, June 23, 2007

லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது!

திருநெல்வேலி அருகே உள்ள மானூரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். மானூர் அருகே இரண்டும்சொல்லான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவர் ஒரு வேலை விஷயமாக மானூர் உதவி மின் பொறியாளர் நரேந்திரனை அணுகியபோது, அவரிடம் நரேந்திரன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் லஞ்சம் கொடுத்தபோது திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் எஸ்பி மலுக் முதலி தலைமையில் சென்ற போலீசார் மறைந்திருந்து நரேந்திரனை பிடித்து கைது செய்தனர்.

2 comments:

வவ்வால் said...

லஞ்சம் வாங்கினேன் பிடித்தார்கள்,
கொடுத்தேன் விட்டு விட்டார்கள்!

இது அந்த மின் பொறியாளர்"சற்றுமுன்" எழுதிய கவிதை என்று "சற்று முன்" நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது!

SurveySan said...

adraa sakkai!

-o❢o-

b r e a k i n g   n e w s...