.

Wednesday, June 6, 2007

கொல்கத்தா சிறையில் ஒரு மெக்ஸிகன் உண்ணாவிரதம்

எட்வர்டோ அன்டோனியோ (Febles Ortiz Eduardo Antonio ) என்ற நாற்பத்தி ஏழு வயது மெக்ஸிகன் பயணி, மார்ச் 21ஆம் தேதி, தில்லியிலிருந்து பாங்காங் செல்லும் இந்திய விமானம் ஒன்றில் குடிபோதையில் சக பயணிகளை மிரட்டிய காரணத்துக்காக கைது செய்யப்பட்டார். அபாயகரமான வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக அவர் செய்த கலாட்டாவில் விமானத்தைக் கொல்கத்தாவில் தரையிறக்கி அவரைப் போலீஸார் வசம் ஒப்புவித்தனர்.

அவருக்கு பெயில் அளிக்கப்பட்டு விட்ட பிறகும், அதற்கான தொகையான ரூ 4,50,000/- ஐ அவரால் கட்ட முடியாமல் போனதால் தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இந்தத் தொகை மிக அதிகம் என்றும், தன்னால் கட்ட முடியாது என்றும் சொல்லும் அந்தோனியோ, தன்னை விடுவிக்கச் சொல்லி நேற்று முதல் சிறையிலேயே கால வரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.

Mexican on hunger strike in Kolkata jail - DNA

1 comment:

Boston Bala said...

லகே ரஹோ அந்தோணிபாய் :)

-o❢o-

b r e a k i n g   n e w s...