.

Wednesday, June 6, 2007

வாயில் தீக்குச்சியை கொளுத்திப்போட்ட கொடூரம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் அரிஜன காலனியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. அவருடைய மகன் சன்னாசி (வயது 15).

வாலிபர் சன்னாசி நேற்று முன்தினம் இரவு, அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள குமாரின் வீட்டிற்கு சென்று டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே காலனியை சேர்ந்த வாலிபர் குணசேகரன் அங்கு வந்தார்.

அவர், டி.வி. நிகழ்ச்சிகளை மும்முரமாக ரசித்துக் கொண்டிருந்த சன்னாசியை கடைக்கு சென்றுவரும்படி கூறி வேலை வாங்கினார். அதற்கு சன்னாசி மறுக்கவே, அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த குணசேகரன், ஒரு தீக்குச்சியை கொளுத்தி, சன்னாசியின் வாயில் வலுக்கட்டாயமாக போட்டதாக கூறப்படுகிறது. இதில் சன்னாசியின் நாக்கு மற்றும் உதடு ஆகியவற்றில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து நல்லதம்பி, வாலிபர் குணசேகரனிடம், "ஏன் இதுபோல் செய்தாய்?" என்று கூறி தட்டிக்கேட்டார். அதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த குணசேகரன், அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து தாத்தாவின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் நல்லதம்பி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து, ஆத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலாம்பாள் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிவிட்ட வாலிபர் குணசேகரனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...