.

Wednesday, June 6, 2007

திமுகவினர் மிரட்டுவதாக விஜயகாந்த் புகார்

மதுரை மேற்கு தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேமுதிகவினரையும், கட்சி கவுன்சிலர்களையும் திமுகவினர் மிரட்டி வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியலில் என்னை முடக்க சதி திட்டம் நடத்தப்படுகிறது. பொருளாதார ரீதியாகவும் முடக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். அது நடக்காது. நான் தெய்வத்தையும், மக்களையும் நம்பி வந்திருக்கிறேன். மதுரை மேற்கு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட முடியாதவாறு ஆளும் கட்சியினர் தேமுதிகவினரை மிரட்டி வருகின்றனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களின் வீட்டிற்கு சென்று பேரம் பேசி வருகின்றனர். தேமுதிக அனைத்து இடையூறுகளையும் கடந்து மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெறும் என்றார் விஜயகாந்த்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...