.

Saturday, July 28, 2007

ஆந்திர மாநிலத்தில் 9 பேர் போலிசாரால் சுட்டுக் கொலை !

ஜூலை 28, 2007 ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 'பந்த்' தின் போது ஏற்பட்ட வன்முறையறையை கட்டுப்படுத்த எடுத்த போலிசார் நடவடிக்கையில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து எதிர்கட்சிகள் முதல்வரை பதவி விலக் கோரி அறிக்கை விடுத்துள்ளனர்.

********

தட்ஸ் தமிழில் இதுபற்றிய வந்த செய்தி குறிப்பு

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற பந்த்தில் பெரும் வன்முறை மூண்டது. போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர்.

ஆந்திர மாநிலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் நிலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயனடைந்த பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என தெலுங்குதேசம் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தன.

அரசின் விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏழை விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலையும், ஆளும் காங்கிரசின் அராஜக செயலையும் கண்டித்து இன்று பிரதான எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

ஆனால் எதிர்க்கட்சிகள் விடுத்த பந்த்தை மீறி ஆந்திரா அரசு இன்று நகரில் பஸ் மற்றும் ரயில்களை இயக்கியது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் பல இடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளின் மீது தெலுங்குதேசம், பாஜகவினர் அடித்து நொறுக்கினர். ரயில் மறியலும் நடந்தது.

இந்த பந்தையொட்டி அனைத்து கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், கடைகள், தனியார் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை.

பல்வேறு இடங்களில் நடந்த வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாயினர்.

-o❢o-

b r e a k i n g   n e w s...