.

Tuesday, July 3, 2007

ஜெயேந்திரர் ஆஜராக உத்தரவு .

மந்தைவெளி ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர் உட்பட 11 பேர் மீது சென்னை செசன்ஸ் கோர்ட்டில் வரும் 23ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுகிறது. அன்று அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை மந்தைவெளியில் வசித்து வந்த ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் வீட்டு வேலையாள் ஆகியோர் தாக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக காஞ்சி ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கான்ட்ராக்டர் ரவிசுப்ரமணியன் உட்பட 12 பேர் மீது கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ரவி சுப்ரமணியன் அப்ரூவராக மாறினார்.வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி சுந்தரேச அய்யர், ரகு ஆகியோர் சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி முகமது இசத் அலி, இவர்கள் மீதான வழக்குக்கு ஆரம்ப முகாந்திரம் உள்ளது என கூறியுள்ளார். மேலும், வரும் 23ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்; வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...