.

Tuesday, July 3, 2007

ராதிகா செல்வி Vs. வேலு

நெல்லையில் செயல்பட்டு வந்த ரயில்வே துணை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை மதுரைக்கு மாற்றி இருக்கிறது தென்னக ரயில்வே.

"ரயில்வே அதிகாரிகளின் சுய லாபத்துக்காகவே இந்த மாறுதல்" என்று ரயில்வே ஊழியர்கள் போர்க்கொடி தூக்கும் இந்த விஷயத்தில் தலையிட்டிருக்கிறார் உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி.

"நெல்லை-திருச்செந்தூர் அகல ரயில் பாதைத் திட்டத்துக்கு 15 ஆண்டுகள் போராடிய பிறகுதான் தற்போது திட்டம் துவக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நெல்லையில் செயல்பட்டு வந்த துணை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை மதுரைக்கு மாற்றியதை மீண்டும் நெல்லைக்கே மாற்ற வேண்டும்'' என்று ரயில்வே துறை இணை அமைச்சர் வேலுவிடம் நேரடியாகவே தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளாராம் ராதிகா செல்வி.

தமிழன் எக்ஸ்பிரஸ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...