.

Saturday, July 14, 2007

சென்னையில் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பாடி பார்க் சாலையில் தனியாருக்கு சொந்தமான 10 மாடி கட்டடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் அமெரிக்கார்ப் பிசினெஸ் சர்வீசஸ், ரிலையனஸ் நிறுவனம், சதர்ன்லேன்டு குளோபல் சர்வீசஸ் உட்பட பல்வேறு சாஃப்ட்வேர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை மாலை கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர் கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், இன்னும் சில நிமிடங்களில் அது வெடிக்கும் என்றும் கூறினார்.

60-க்கும் மேற்பட்டவர்கள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். இறுதியில், வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...