.

Friday, August 10, 2007

குஜராத்தில் காவலர் தடியடி: குழப்பம்

குஜராத்தில் காங்கிரஸ் கூட்டமொன்றில் முக்கியதலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்த சமயம் காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர்குண்டுகளை வீசியதில் குழப்பம் விளைந்தது. காங்கிரஸ் தலைவர்கள் குஜராத் முதல்வர் மோடியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குலைந்திருப்பதையும் இலஞ்சம் பரவியுள்ளதையும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தக் கூட்டத்தில் விமரிசித்திருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.மூத்த தலைவர்கள் அர்ஜுன் மோத்வாடியா, பாரத் சோலங்கி போன்றோர் கண்ணீர்குண்டுகள் மேடையில் விழுந்ததும் பதறி ஓடினர். காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் பல பஸ்களை அடித்து நொறுக்கியும் முதல்வர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த பொதுக் கூட்டத்திற்கு பிறகு பேரணியாகச் சென்று மாநில செயலகத்தை முடக்குவதாக திட்டமிட்டிருந்தனர்.
கூட்டத்தினரின் கல்லடியில் இராஜ்கோட்டின் காவல் கண்காணிப்பாளர் பிரம்மபட் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

Chaos after baton-charge in Gujarat-Ahmedabad-Cities-The Times of India

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...