.

Tuesday, March 6, 2007

இந்தோனேசிய நிலநடுக்கம்: 30 பேர் பலி

நில அதிர்வுகளுக்கு மத்தி யில் அடிக்கடி அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்தோனேசிய மக்களை இன்று காலை மீண்டும் ஒரு வலுவான நிலநடுக்கம் தாக்கியது. அந்த நில நடுக்கம் இந் தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள வடக்கு மாகாண தலைநகர் பதங் அருகில் மையம் கொண்டிருந்தது. அந்த நாட்டு நேரப்படி காலை 10.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற கணக்கில் அது பதிவாகி இருந்தது. மிக வலுவான இந்த நில நடுக்கத்தால் தலை நகர் பதங் குலுங்கியது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

சுமத்ரா தீவை புரட்டிப்போடும் வகையில் இந்த நிலநடுக்கம் இருந்ததாக உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்தும் அலுவலகங்களில் இருந்தும் அலறியடித்தப்படி வெளியில் ஓடி வந்தனர். தெருக்களில் திரண்ட மக்கள் பதட்டத்துடன் நடுங்கியபடி நின்றனர்.

இதற்கிடையே நிலநடுக் கத்தால் சுனாமி பேரலைகள் தாக்ககூடும் என்ற பீதி பர வியது. இதனால் மக்கள் உயரமான பகுதிகளுக்கு படை யெடுத்தனர். மக்கள் குடும்பம், குடும்பமாக பதங் நகரை விட்டு வெளியேறியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு பக்கம் மக்கள் ஓட்டம் பிடித்துக்கொண்டிருந்த நிலையில் மற்றொரு பக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணி நடந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப் பட்டனர்.

மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 1 மணி நேரம் கழித்து பதங் நகர் அருகே மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமத்ரா தீவு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கமும் பதங் நகர் அருகே மையம் கொண்டிருந்ததால் பதங் நகரம் மிக கடுமையாக பாதிக் கப்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் முழுமையாக நொறுங்கி விட்டன. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் செத்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பதங் நகர் அருகில் உள்ள பதுசங்கர்நகரில்தான் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்தது. அந்த நகரில் நில நடுக்கத்துக்கு 30 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. உயிரிழப்புமேலும் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பதங், பதுசங்கர் நகர இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பதங் நகர மருத்துவமனைகளுக்கு மற்ற பகுதிகளில் இருந்து டாக்டர்கள் விரைந்துள்ளனர்.

மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுனாமி தாக்காது என்று இந்தோனேசியா அறிவித்த பிறகே சுமத்ரா தீவு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

சுமத்ரா தீவில் உருவான நிலநடுக்கம் 420 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் உண ரப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள உயரமான கட்டிடங்கள் பலதடவை குலுங்கின. சில கட்டிடங்கள் அங்கும் இங்கு மாக தொட்டில் போல ஆடின.

இதனால் சிங்கப்பூர், மலேசியாவில் மக்களிடம் பதட்டம் ஏற்பட்டது. வீடு, கட்டி டங்களில் இருந்து வெளியேறி தெருக்களில் நின்றனர்.

இந்த நில அதிர்வு காரணமாக சிங்கப்பூர், மலேசியாவில் எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. சுமார் 10 நிமிடங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.

source மாலைமலர்

2 comments:

✪சிந்தாநதி said...

இந்தோனேஷியாவில் தொடர்ந்து 2 முறை ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 75 பேராக உயர்ந்துள்ளது. பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

source தினமலர் இணையதளம்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செய்தி பார்த்தேன்; ஆண்டவனை வேண்டுவதை விட என்ன செய்யமுடியும்

-o❢o-

b r e a k i n g   n e w s...