.

Thursday, March 29, 2007

கட்டாய தமிழ் சுமையாக இருக்காது

தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் தமிழை கட்டாயமாக சொல்லி தரவேண்டும் என தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் விடுதலை ஆஜரானார். ஒன்றாம் வகுப்பு முதல் கட்டாய தமிழ் கொண்டு வருவது மாணவர்களுக்கு சுமையாக இருக்காது. கர்நாடகாவில் 3ம் வகுப்பில் இருந்தும், மகாராஷ்டிராவில் 5ம் வகுப்பில் இருந்தும் தாய்மொழி கட்டாய பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அது சரியானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

- மாலை முரசு

1 comment:

பாரதிய நவீன இளவரசன் said...

Tamil has to be made compulsory. This decision comes after much delay (sorry, dont have tamil fonts now)

-o❢o-

b r e a k i n g   n e w s...