.

Monday, April 2, 2007

ச: இலங்கையில் பஸ் ஒன்றில் குண்டு வெடிப்பு

இலங்கையில் பஸ் ஒன்றில் குண்டு வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர்;20 பேர் காயமடைந்தனர்.

கொழும்பிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அம்பாரா நகருக்கு வெளியே உள்ள ராணுவ சோதனை மையம் அருகில்,இன்று பஸ் ஒன்றில் இருந்து பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது.

இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர்.20 பேர் காயமடைந்தனர்.விடுதலைப்புலிகள்தான் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருப்பதாக இலங்கை போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

"Yahoo-Tamil"

3 comments:

Anonymous said...

புலிகள் காரணம்?

உண்மை என்னவென்று உலகத்திற்கு தெரிவதே இல்லை

Anonymous said...

புலிகளைப் பயங்கரவதிகளின் பட்டியலில் போட இலங்கை அரசு செய்கின்ற செயல் இது. வேடிக்கை என்னவென்றால் இறந்தவர்கள் தமிழர்கள். இதைக்கூட‌
சிங்கள அரசு மறைத்துவிட்டது.

ஒரு அம்பாறை குடிமகன்

Anonymous said...

//என்னவென்றால் இறந்தவர்கள் தமிழர்கள். இதைக்கூட‌
சிங்கள அரசு மறைத்துவிட்டது. //

ஐநா போன்ற உலக அமைப்புகள் என்ன செய்துகொண்டிருக்கிறது.

-o❢o-

b r e a k i n g   n e w s...