.

Friday, May 25, 2007

அலகாபாத்தில் வெடிபொருட்கள் பறிமுதல்.

நக்சல்களுக்கு இது எடுத்துச் செல்லப்பட்டதா ? ஜீப் டிரைவர் ராஜேஷ் படேலிடம் போலீசார் துருவி துருவி விசாரனை.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து அலகாபாத்திற்கு ஜீப்பில் கொண்டு வரப்பட்ட வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். நேற்றிரவு வழக்கமான ரோந்து நடவடிக்கையின் போது இவை கைபற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஜீப் டிரைவர் ராஜேஷ் படேல் என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் தீபக்பட் கூறுகையில், ஜீப்பில் இருந்து 50 கிலோ அமோனியம் நைட்ரேட்டும் 1000 மீட்டர் வெடிமருந்து ஒயர்களும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார். இவை கல் உடைக்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்ற அவர், நக்சல்களுக்கு இது எடுத்துச் செல்லப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாகச் சொன்னார். கடந்த செவ்வாயன்று கோரக்பூரில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்குப் பின், பைசாபாத் மற்றும் பரூக்காப்பாத் ரயில் நிலையங்களில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...