.

Friday, May 18, 2007

ஹைதராபாத் குண்டுவெடிப்பு : சோனியா இரங்கல்.

ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான குடும்பங்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா இரங்கல் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் சார்மினார் அருகேயுள்ள மெக்கா மசூதியில் இன்று மதியம் சக்திவாய்ந்த குண்டு வெடித்து இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியானர்கள். இந்த சம்பவத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களுக்கு இரங்கலும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். இதற்கிடையே பலியான ஒவ்வொருக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும், என மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி அறிவித்துள்ளார்.ஹைதராபாத் சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...