.

Tuesday, June 26, 2007

விமானம் விழுந்து நொறுங்கி 27 பேர் பலி.

கம்போடியா நாட்டை சேர்ந்த `ஏ.என்.24' ரக விமானம் அந்த நாட்டின் சீம்ரீம் பகுதியில் இருந்து சிகானுக்விலி என்ற இடத்துக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் சிப்பந்திகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட 27 பேர் இருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாக மறைந்து விட்டது. விமானத்தின் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

அப்போது பலத்த காற்றும் வீசியது. சிறிது நேரத்தில் அந்த விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் உள்பட 27 பேரும் பலியாகி விட்டனர்.

இந்த இரு சுற்றுலா நகரங்களுக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் தான் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. விபத்தில் பலியானவர்களில் 13 பேர் தென்கொரி யாவை சேர்ந்தவர்கள். 3 பேர் செக் குடியரசை சேர்ந்தவர்கள். 5 பேர் கம்போடியாவைச் சேர்ந்தவர்கள்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...