.

Tuesday, June 26, 2007

'எய்ட்ஸ்' குழந்தைகள் பள்ளி செல்ல எதிர்ப்பு

கேரள மாநிலம் பம்பாடியில் உள்ள மார் டயோனிசியஸ் துவக்கப்பள்ளியில் 2 மற்றும் 3-ஆம் வகுப்புகளில் படித்துவரும் 5 குழந்தைகளுக்கு எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த டிசம்பரில் தெரிய வந்தது. இதையடுத்து அந்தக் குழந்தைகள் அதே பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கு மற்ற குழந்தைகளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அக் குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.

எனினும், அதன்பிறகு இந்த விவகாரம் மாநில அரசின் கவனத்துக்குச் சென்றது. இதனால் எழுந்த நிர்பந்தத்தின் காரணமாக அக் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது இப் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, திங்கள்கிழமை பள்ளிக்கு மூன்றே மாணவர்கள்தான் வந்திருந்தனர். பள்ளி வாகனத்தில் பழுது ஏற்பட்டதால் எச்ஐவி பாதித்த 5 மாணவர்களும் திங்கள்கிழமை பள்ளிக்கு வரவில்லை. இவர்கள் அனைவரும் 'ஆஷா கிரண்' என்ற மறுவாழ்வு மையத்தில் தங்கியிருக்கின்றனர்.

அப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் திங்கள்கிழமை கூடியது. அதில், இந்த விவகாரம் குறித்து 3 நாள்களுக்குள் முடிவெடுப்பதற்காக 5 நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...