.

Tuesday, June 26, 2007

அரசியலில் முன்னாள் கேப்டன் அஸ்ஹருத்தீன்

தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸ்ஹருத்தீன் சேருகிறார்.

தேவேகவுடா கட்சியில் அஸ்ஹருத்தீன் சேருகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்ஹருத்தீன். சூதாட்டத்தில் சிக்கியதால் இவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.

கிரிக்கெட்டுக்கு பிறகு அவர் தற்போது அகாடமிகளை நடத்தி இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மேலும் பல்வேறு வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் அஸ்ஹருத்தீன் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மத சார்பற்ற ஜனதாதள கட்சியில் அவர் சேருகிறார். தேவேகவுடாவை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அஸஹருத்தீன் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் நாளை சேரலாம் என்று தெரிகிறது.

இதே போல இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரும், கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான தோடா கணேசும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் சேருகிறார். அவரும் தேவேகவுடாவை சந்தித்து பேசினார்.

தோடா கணேஷ் சமீபத்தில்தான் முதல்தர போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பிறகு புதிய வாழ்க்கையான அரசியலுக்கு பிரவேசிக்கிறார்.

முன்னாள் வீரர்களான கீர்த்தி ஆசாத், சேட்டன் சவுகான், சித்து ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...