.

Tuesday, June 26, 2007

இந்திய விமானங்கள் தரையிறங்க குவைத் அரசு தடை.

இந்தியாவின் அரசு சார்பு விமானப் போக்குவரத்து நிறுவனங்களான "இந்தியன்' மற்றும் "ஏர் இந்தியா' ஆகியவற்றின் விமானங்கள் தரையிறங்க குவைத் அரசு தடை விதிக்க இருக்கிறது. வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இத்தடை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் வேறு விமானப் போக்குவரத்து நிறுவனங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தப்படி, இந்தியாவிலிருந்து குவைத்துக்கு செல்லும் குவைத் அரசு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதியளிக்க வேண்டும் என அந்நாடு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்தக் கோரிக்கையை இந்தியா கண்டுகொள்ளாமல் இருப்பதால் குவைத் இந்த முடிவை எடுத்திருப்பதாக "அரபு டைம்ஸ்' என்ற நாளிதழ் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...