.

Tuesday, June 26, 2007

முதிர்ந்த காதல்; மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்.

கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. அப்போது பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பத்தை சேர்ந்த ராயர் படையாட்சி (82) என்பவர் தனது மனைவி பிச்சையம்மாளை (80) இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அமைப்பை சேர்ந்தவர்களுடன் ஸ்டிரச்சரில் தூக்கிக் கொண்டு கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்தார்.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அமைப்பினர் மூதாட்டி பிச்சையம்மாள் இருந்த ஸ்டிரச்சரை கலெக்டருக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தனர். இதைபார்த்த கலெக்டர் ராஜேந்திரரத்னூ தனது இருக்கையை விட்டு எழுந்து ஸ்டிரச்சர் அருகே ஓடிவந்தார் அவரை பார்த்த முதியவர் ராயர் தான் கொண்டு வந்த மனுவை கலெக்டரிடம் கொடுத்தார். அப்போது ராயர் எனக்கு அரசு நிலம் வழங்கிய இடத்தில் வீடு கட்டிதாருங்கள். அதுவே எனது ஆசை என்று கூறினார். இதனை தொடர்ந்து ராயர் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து உடல் நலம் குன்றியிருந்த மூதாட்டி பிச்சையம்மாளை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லுமாறு கலெக்டர் கூறினார். ஆனால் அதற்கு ராயர் மறுத்து விட்டார். நாங்கள் ஊருக்கு போகிறோம். என்னால் எனது மனைவியை பிரியமுடியாது. இது எங்கள் வாழ்க்கையின் கடைசி கட்டம். உயிர் போவதற்குள் சொந்த வீட்டில் இருவரும் வாழ வேண்டும். என்பதே எங்கள் ஆசை என்று கூறினார்.

பின்னர் முதியவர் ராயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களுக்கு குழந்தைகள் இல்லை உறவு என்று சொல்ல எவரும் இல்லை. 60 ஆண்டுகளுக்கு முன்பு நான் பரங்கி பேட்டையில் தென்னை மரம் ஏறிக் கொண்டு இருந்தேன். அப்போது பிச்சையம்மாள் தென்னை ஓலைகளை எடுத்து ஈக்குகளை சேகரித்து விற்பனை செய்து வாழ்ந்து வந்தாள். அவள் மீது பரிதாபம் கொண்ட நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு பின் ஒருநாள் கூட நாங்கள் பிரிந்தது இல்லை. உயிர் போவதற்குள் சொந்த வீட்டில் வாழவேண்டும் என்பது தான் எங்களது ஒரே ஆசை எங்களது ஆசையை கலெக்டர் நிச்சயம் நிறைவேற்றி வைப்பார். என்று நம்புகிறேன்.

இவ்வாறு ராயர் கூறினார்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...